அரியலூர் மாவட்டம், வி.கைாகட்டிக்கு தெற்கே அமைந்துள்ளது மு.புத்தூர் கிராமம். இங்கு தனியார் சுண்ணாம்பு கல் சுரங்கம் ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் இருந்து லாரிகளில் சுண்ணாம்பு கற்களை ஏற்றிக் கொண்டு தினமும் மங்கட்டான், சேலத்தார் காடு, நாமங்கலம்பிரிவு வழியாக அதிக பாரத்துடன் மின்னல் வேகத்தில் செல்கிறது. இதனால் அடிக்கடி அப்பகுதியில் விபத்து ஏற்படுகிறது. மேலும் குறிப்பிட்ட நேரத்தை தாண்டியும் லாரிகள் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.