மதுரை மாவட்டத்தில் கோடைக்காலம் முடிந்த நிலையில் மழைக்காலம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் அழகர்கோவில் ரோடு கொடிக்குளம் கண்மாய் உள்பட மாவட்டத்தின் அனைத்து கண்மாய்களையும் தூர்வார வேண்டும். இதன் மூலம் நீர் ஆதாரங்களை சேமித்து விவசாயம் போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தலாம். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கண்மாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.