மதுபிரியர்கள் அட்டகாசம்

Update: 2022-07-23 14:45 GMT

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான மருத்துவ கல்லூரிக்கு எதிரில் மது பிரியர்கள் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு சாலையின் நடுவே பாட்டில்களை உடைத்து சென்று விடுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்