கடலூர் துறைமுகம் 38-வது வார்டு மோகன் தெருவில் திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதில் ஏவரேனும் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒரு வித அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே சிறுபாலம் அமைத்து கழிவுநீர் கால்வாயை உடனடியாக மூட வேண்டும்.