விருதுநகர் மாவட்டம் வெங்காநல்லூர் கிராமம் இ.எஸ்.ஐ.காலனி பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு வாருகால், கழிப்பறை, குடிநீர், குப்பை தொட்டி போன்ற அடிப்படை வசதியின்றி சிரமப்படுகின்றனர். இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திட அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?