சாத்தான்குளம் பேரூராட்சி முதலூர் சாலையில் டி.டி.டி.ஏ. பள்ளிக்கு எதிரே அபாயகரமான சாலை வளைவு உள்ளது. அந்த வளைவில் கழிவுநீர் வாறுகாலுக்கு தடுப்புச்சுவர் இல்லாததால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே அங்கு தடுப்புச்சுவர் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?