புவனகிரி ஒன்றியம் பின்னலூர் ஊராட்சி சென்னை-கும்பகோணம் சாலையில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் மந்தகதியில் நடந்து வருவதால், மழைநீர் செல்ல முடியால் தேங்கி நிற்கிறது. மேலும் இப்பணியின் போது உடைந்த குடிநீர் குழாயும் சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிப்பதோடு, குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும்.