வங்கி ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும்

Update: 2022-07-23 13:09 GMT

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலவிடுதியில் சுமார் 25 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்த வங்கிக்கு ஏ.டி.எம். மையம் இல்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் பணம் எடுக்க வெகுதூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு வங்கி ஏ.டி.எம். மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்