ஈக்கள் தொல்லை

Update: 2023-06-11 12:17 GMT

சூலூர் தாலுகா சித்தநாயக்கன்பாளையம் அருகே கோழிப்பண்ணைகள் அதிகளவில் உள்ளன. இந்த கோழிப்பண்ணைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை. இதன் காரணமாக ஈக்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. வீடுகளிலும், கடைகளிலும் உள்ள உணவு பொருட்களில் கூட்டம், கூட்டமாக ஈக்கள் மொய்ப்பதால், அனைத்து தரப்பினரும் அவதிப்படுகிறார்கள். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே ஈக்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்