மரக்கிளைகளில் உரசி செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-06-07 11:16 GMT
திருச்சி மாவட்டம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி கணபதிபாளையம் பஸ் நிலையத்தின் அருகே அரசு மரத்தின் கிளைகளில் மின்கம்பிகள் உரசி செல்கிறது. தற்போது மழை, காற்று அதிகளவில் வீசுவதால் அவ்வபோது தீப்பொறிகளுடன் மின்தடையுடம் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்