வீலிங் செய்யும் இளைஞர்களால் ஆபத்து

Update: 2023-06-07 11:12 GMT
கிருஷ்ணகிரி நகரில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களை ஓட்டும் இளைஞர்கள் சிலர் வீலிங் செல்கிறார்கள். அதே போல இரு சக்கர வாகனங்களை அதி வேகமாக ஓட்டி பிற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள். இவர்களால் விபத்துகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன.
இருசக்கர வாகனத்தின் முன்வீலை மேலே உயர்த்தியபடி வீலிங் செய்தும், அதி வேகமாகவும், அதிக ஒலி எழுப்ப கூடிய சைலன்சர் பொருத்தி ஆபத்தான பயணங்களை மேற்கொள்கிறார்கள். இவர்களால் பிற வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ளது. மேலும் விபத்தில் சிக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களை ஆபத்தான முறையில் இயங்கும் இளைஞர்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்