நூலகம் மீண்டும் அமைக்கப்படுமா?

Update: 2023-06-07 07:40 GMT
திருச்செந்தூர் நகராட்சி அலுவலகத்திற்கு முன்பாக காமராஜர் சிலை அருகில் நகராட்சி நூலகம் இயங்கி வந்தது. பராமரிப்பு இல்லாத காரணத்தினால் நூலக கட்டிடத்தில் மரங்கள் வளர்ந்து கட்டிடம் பழுதடைந்துள்ளது. இதனால் இந்த நூலகம் தற்போது மூடப்பட்டுவிட்டது. நூலக கட்டிடத்தை பழுதுபார்த்து, பல வாசகர்களுக்கு பயன்பட்ட நூலகத்தை மீண்டும் திறக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்