விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது திருவிழா நடந்து வருகிறது. விழாவில் சிலர் அரசின் உத்தரவை மீறி கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்துகின்றனர். இதனால் குழந்தைகள், முதியவர்கள் பெண்கள் என அனைவரும் பாதிக்கப்படுவதுடன் ஒலி மாசுபாடும் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.