பகுதி நேர நியாய விலை கடை திறக்கப்படுமா?

Update: 2023-06-04 11:46 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூர் ஊராட்சி, பழைய அரசமங்கலம் கிராமத்தில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அரசு அனுமதி பெற்றும், பகுதி நேர நியாய விலை கடை திறக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். அதனால் எங்கள் கிராம மக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று நியாய விலை கடையில் இருந்து பொருட்கள் வாங்கி வருகிற அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

மயான வசதி