பகுதி நேர நியாய விலை கடை திறக்கப்படுமா?

Update: 2023-06-04 11:46 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூர் ஊராட்சி, பழைய அரசமங்கலம் கிராமத்தில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அரசு அனுமதி பெற்றும், பகுதி நேர நியாய விலை கடை திறக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். அதனால் எங்கள் கிராம மக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று நியாய விலை கடையில் இருந்து பொருட்கள் வாங்கி வருகிற அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்