புறக்காவல்நிலையம் அமைக்கப்படுமா?

Update: 2023-06-04 11:43 GMT
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட குழுமணியில் அதிக அளவில் வீடுகள், கடைவீதிகள், வங்கிகள், மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், திருமணமண்டபங்கள், உணவகங்கள், பள்ளிக்கூடங்கள், வாரச்சந்தைகள் மற்றும் பல நகை அடகு கடைகள் உள்ளன. மக்கள் எப்போதும் அதிகம் கூடுகின்ற பகுதிகளாக உள்ளன. இந்த பகுதியில் பல குற்றச் சம்பவங்கள், திருட்டு, வழிபறி, விபத்துகள் என தொடர்ந்து நடைபெறுகின்றன. பொதுமக்களும் புகார்கள் அளிக்க ஜீயபுரம் செல்ல வேண்டியிருக்கிறது. பஸ் வசதிகள் மிகக்குறைவாக உள்ள நிலையில் குழுமணியில் புறக்காவல்நிலையம் அமைத்து இப்பகுதியினை கண்காணித்து குற்றச்செயல்களை தடுத்து பொதுமக்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்