ஆபத்தான நிலையில் பள்ளியின் சுற்றுச்சுவர்

Update: 2023-06-04 11:41 GMT

ஆபத்தான நிலையில் பள்ளியின் சுற்றுச்சுவர்

பல்லடம் என்.ஜி.ஆர். ரோட்டில் நகராட்சி நடுநிலைப்பள்ளி (மேற்கு) செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் மேற்கு புறமாக உள்ள சுற்றுச்சுவர் எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும், எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றுச்சுவரை அகற்றிவிட்டு, பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்

-----------

சம்பத்,அருள்புரம்.

987654 74538

மேலும் செய்திகள்