சமூக சீர்கேடுகள் தடுக்கப்படுவது எப்போது?

Update: 2022-04-27 14:46 GMT
சென்னை குயப்பேட்டை, சச்சிதானந்தம் 2-வது தெரு பழைய குடியிருப்பு வாரியம் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான சமூக நல திருமண மண்டபம் ஒன்று உள்ளது. இந்த திருமண மண்டபம் நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி இருக்கின்றது. இதனால் சமூக விரோதிகள் சிலர் தினசரி பகல்-இரவு முழுவதும் சூதாட்டத்தில் ஈடுபடுவதோடு, மது அருந்துவது போன்ற தகாத செயல்களில் ஈடுகின்றனர். இதை யாரும் கண்டு கொள்ளவில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்தபகுதி வழியே நடந்து செல்லவே அச்சப்படும் சூழ்நிலை நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து இது போன்ற செயல்கள் இனிமேலாவது நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்