திருச்சி மாவட்டம், குழுமணி பகுதியில் உள்ள சில்லரை கோழி கடைகள் மூலமாக கோழி கறிகள் விற்பனை செய்யப்பட்டு, அவற்றின் கழிவுகளை குழுமணி ஊராட்சிக்கு உட்பட்ட கோப்பு- எட்டரை சாலையின் ஓரத்தில் கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமல்லாது, கோழி கழிவுகள் கொட்டபடுகின்ற சாலை, மிக புகழ் பெற்ற வயலூர் முருகன் கோவில் செல்லும் மிக முக்கியமான சாலையாகும். இந்த குழுமணி சாலை வழியாக வயலூர் மட்டுமல்லாது, சோமரசம்பேட்டை வழியாக திருச்சி பகுதியை இணைக்கும் மிக முக்கியமான சாலையாகும். இந்த சாலையில் தினமும் நூற்றுகணக்கானவர்கள் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் கோழிக்கழிவுகள் கொட்டப்படுவதினால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.