குப்பை கூளங்களால் சுகாதாரக்கேடு

Update: 2023-05-31 09:00 GMT
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பந்தல் மண்டபம் வழியாக வந்து கோவிலின் நுழைவு வாயிலை அடைவதற்கு திரும்பும் இடத்தில் குப்பைகளை கொட்டி வைத்திருக்கிறார்கள். தினத்தோறும் அகற்றப்படாத இந்த குப்பை கூளங்களால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்படுகின்றது. சேர்ந்துள்ள குப்பை கூளங்களில் மாடுகள் மேய்ந்து குப்பைகளை ரோடு முழுவதும் பரப்புகின்றன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். அங்கு குப்பை தொட்டிகளை வைத்து நிரந்தர தீர்வை ஏற்படுத்த கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்