சேதமடைந்த கம்பி

Update: 2023-05-28 17:45 GMT

சேலம் மாவட்டம் ரெட்டிப்பட்டி மேம்பாலம் அருகே பழைய சூரமங்கலம் செல்வதற்காக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை நுழைவாயிலில் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கப்பட்டு அதன் மேல் கம்பி வளையம் போடப்பட்டுள்ளது. இந்த கம்பி வளையம் தற்போது மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சதீஷ்குமார், சுப்பிரமணிய நகர், சேலம்.

மேலும் செய்திகள்