குரங்குகள் தொல்லை

Update: 2023-05-28 10:52 GMT
திருச்சி மாவட்டம், திருப்பட்டுர் கிராமத்தில் பிரம்மா கோவில் உள்ளது. இங்கு வெளியூர்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகிறது. இந்த குரங்குகள் கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடைமைகள் மற்றும் பொருட்களை பிடுங்கி செல்கிறது. மேலும் குழந்தைகள் கையில் வைத்திருக்கும் திண்பண்டங்களை பிடுங்குகிறது. மேலும் சில நேரங்களில் பொதுமக்களை பரண்டி காயமும் படுத்தி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்