தெருநாய்கள் தொல்லை

Update: 2023-05-25 09:44 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உழவர் சந்தை பின்புறமுள்ள நியூ டெம்பிள் ஹட்கோ பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் மக்கள் நடமாட்டமும் அதிகளவில் உள்ளது. இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். சிறுவர் முதல் பெரியவர் வரை சாலையில் நடமாடவே பயப்படுகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-லட்சுமி, ஓசூர்.

மேலும் செய்திகள்