சேலம் மாவட்டம் தாரமங்கலம் பஸ் நிலைய பகுதியில் மேட்டூர் திருப்பத்தில் இருந்து காவல் சார்பு ஆய்வாளர் அலுவலகம் வரை சாலையின் நடுவே வைக்கப்பட்டு இருந்த தடுப்புச்சுவர் கடந்த தைப்பூசம் தேர் திருவிழாவிற்காக தற்காலிகமாக அகற்றப்பட்டது. ஆனால் மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மீண்டும் தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாஸ்கர், தாரமங்கலம், சேலம்.