மதுரை மாநகராட்சி 9-வது வார்டு ,ரமணா அவென்யூ,டி.எம். நகர் 8-வது குறுக்குத் தெரு பகுதியில் உள்ள தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சாலையில் பயணிக்க பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற அசம்பாவிதங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே தெருவிளக்கை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.