குரங்குகள் தொல்லை

Update: 2023-05-21 13:35 GMT

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் இங்கு குரங்குகள் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இப்பகுதியில் விஷப் பாம்புகள் சுற்றி திரிவதினால் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் வந்து செல்கின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்