பட்டுப்போன புளியமரம்

Update: 2023-05-17 10:47 GMT

சிறுவாச்சூர் - இலுப்பைக்குடி சாலையில் நத்தக்காடு கிராமத்தின் உப்பேரி பகுதியில் உள்ள சாலையோர புளிய மரமானது பட்டுப்போய் உள்ளது. இந்த சாலை வழியாக பஸ்களில் மட்டுமல்லாது பல இருசக்கர வாகனங்களின் மூலமும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் உள்ள புளிய மரத்தை மக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்