தெருநாய்கள் தொல்லை

Update: 2023-05-17 09:13 GMT

கோவை உக்கடம், கரும்புக்கடை, பிலால் எஸ்டேட் ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை சாலையில் நடந்து செல்வோரை துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. மேலும் வாகனங்களில் செல்வோரையும் துரத்துகின்றன. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி சென்று, விபத்தில் சிக்க வைக்கின்றன. இதனால் சாலையில் செல்லவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டியுள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்