திருச்செந்தூர் நகராட்சி மேலரதவீதியில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்படாததால் சாலை ஓரத்தில் குப்பைகளை கொட்டுகிறார்கள். அவ்வாறாக சேரும் குப்பைகளை கால்நடைகள் மேய்ந்து, ரதவீதி முழுவதும் குப்பை கூளமாக காட்சி அளிப்பதோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க இப்பகுதியில் நகராட்சி சார்பில் குப்பைத்தொட்டிகளை வைத்து பராமரிக்க வேண்டும்.