மைதானத்தில் சீறிப்பாயும் இருசக்கர வாகனம்

Update: 2023-04-30 18:26 GMT

புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் காலை, மாலை நேரத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கணக்கானவர்கள் நடைபயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இதற்காக வருபவர்கள் சிலர் தங்களின் இருசக்கர வாகனங்களில் மைதானத்துக்குள் சீறி பாய்ந்து செல்வது, நடைபயிற்சி செய்பவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒழுங்குப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்