குரங்குகள் தொல்லை

Update: 2023-04-30 15:39 GMT
புதுக்கோட்டை மாவட்டம், நத்தம் பண்ணை பகுதிகளில் தினந்தோறும் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த குரங்குகள் வீடுகளின் உள்ளே புகுந்து வாழை, மாமரம், தென்னை மரங்களில் ஏறி இலைகளை கடித்து சேதப்படுத்துகிறது. மேலும் வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள உணவுகளை எடுத்து சென்று விடுகிறது. சில நேரங்களில் முதியவர்கள், குழந்தைகளை கடிக்கிறது. இதனால் அனைத்து தரப்பினும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்