
காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் சேர்மன் சாம்பசிவம் தெருவில் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு எதிரே சில ஆண்டுகளுக்கு முன்பு மழை நீர் சேமிப்புத் தொட்டி ஓன்று அமைக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் அந்த தொட்டியின் மேல்மூடி சேதமடைந்து ஆபத்தாக காட்சி அளிக்கிறது. விபத்து எதுவும் ஏற்படும் முன்பு அதை சரி செய்ய சம்பந்தபட்ட அதுகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.