பாழடைந்த பவுண்டு கட்டிடம்

Update: 2023-04-26 10:30 GMT

ஏரல் மேற்கு ஆசாரிமார் தெருவில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பவுண்டு கட்டிடம் மிகவும் பாழடைந்து பழுதுபார்க்கப்படாமல் உள்ளது. வருவாய்துறைக்கு சொந்தமான இந்த கட்டிடம் மேற்கூரை எதுவுமின்றி, முள்மரங்கள் சூழ்ந்து, புதர் மண்டிக்கிடக்கிறது. இந்த கட்டிடத்தின் அருகில் பள்ளிக்கூடம், மேல்நிலை குடிநீர்தொட்டி, கோவில் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. விபத்து அபாயம் எதுவும் ஏற்படுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோருகிறேன்.

மேலும் செய்திகள்