நிழற்கூடம் தேவை

Update: 2023-04-26 08:45 GMT
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பஸ் நிலையத்தில் நிழற்கூடம் இல்லை. கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் முதியவர்கள், குழந்தைகள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. மேலும் பயணிகள் உட்கார போதுமான வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக போதுமான இருக்கை வசதியுடன் கூடிய நிழற்கூடம் அமைத்துக்கொடுக்க வேண்டும்.
-சசிகுமார், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்