திருச்சி கருமண்டபம் செல்வநகர் 2-வது வீதியில் மின்சாரத் துறையினரால் மரக்கிளைகள் வெட்டப்பட்டு சாலை ஓரத்தில் கிடந்தன. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது என தினத்தந்தி புகார் பெட்டி பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக கிடந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.