வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-07-21 17:29 GMT

கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையத்தில் மேம்பாலம் கட்டுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக கரூர்-சேலம், சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு அந்த வழியாக அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில் தவுட்டுப்பாளையம் போலீஸ் செக் போஸ்ட் அருகே சிறிது தூரம் தார்சாலை அமைக்காமல் அப்படியே விட்டு விட்டதால் அப்பகுதி சாலை நெடுகிலும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் நிலை தடுமாறி சென்று வருகின்றன. சில நேரங்களில் தார்சாலையையொட்டி பள்ளம் இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்