பயனற்ற பயணிகள் நிழற்குடை

Update: 2022-07-21 17:26 GMT

 கரூர் மாவட்டம், நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள புங்கோடையில் சுற்றுவட்டார பகுதி பயணிகளின் நலன் கருதி நிழற்குடை கட்டப்பட்டது. இந்நிலையில் அங்கு தார் சாலையின் குறுக்கே பாலம் கட்டியதால் உயரமான தார்சாலை போடப்பட்டது. இதன் காரணமாக பயணியர் நிழற்குடை பள்ளத்திற்கு சென்று விட்டது. இதனால் பயணிகள் அங்கு அமர்ந்து பஸ்சுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அருகாமையில் உள்ளவர்கள் பயணியர் நிழற்குடைக்குள் தேங்காய் மட்டைகளை குவித்து வைத்துள்ளனர். இதன் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் அப்பகுதியில் சாலை ஓரத்தில் வெயிலில் நின்று பயணம் செய்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்