விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முருகன் கோவில் தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். ஒரு சிலர் நாய்க்கடியால் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.