தெருநாய்கள் தொல்லை

Update: 2023-04-23 09:33 GMT

கோவை இருட்டுப்பள்ளம் கிராமத்தில் தெருநாய்கள் தொல்ைல அதிகரித்து வருகிறது. அவை சாலைகளிலும், வீதிகளிலும் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். குழந்தைகளை தெருநாய்கள் துரத்துவதால், அவர்கள் கீழே தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்