போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-04-19 09:46 GMT

கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலக பகுதியில் இருந்து வால்பாறை மெயின்ரோட்டுக்கு செல்லும் வழியில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன. சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ள அந்த விளம்பர பதாகைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் உள்ளதால், விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அங்குள்ள விளம்பர பதாகைகளை அகற்றி மீண்டும் வைக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்