டி.என்.பாளையம் அருகே பங்களாப்புதூரில் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பிரதான சாலையிலும், 4 முனை சந்திப்பு சாலையிலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டு அதிக சத்தம் எழுப்பி வருகின்றன. இதனால் அந்த பகுதி பொதுமக்கள், தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள், கடைக்காரர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளின் பயன்பாட்டை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.