விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை யூனியன் பாலவநத்தம் கிராமத்தில் உள்ள கண்மாயினை கருவேலமரங்கள் முற்றிலுமாக ஆக்கிரமித்துள்ளன. இதனால் கண்மாயில் நீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது. மேலும் அங்குள்ள ஊருணியின் தடுப்பு சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே கருவேலமரங்களை அகற்றவும், தடுப்பு சுவரை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.