விவசாய பயிர்களை சேதப்படுத்தும் மான்கள்

Update: 2023-04-12 12:49 GMT

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, சிட்டிலரை ஊராட்சி மேலமேடு காட்டுப் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மான்கள் சுற்றி வருகின்றன. இந்த மான்கள் மாலை நேரங்களில் இப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் திடீரென புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் எந்த விவசாயமும் நிம்மதியாக செய்ய முடியவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்