தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-04-09 17:24 GMT

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சென்னஞ்செட்டிபட்டி கிராமத்தின் நுழைவு வாயிலில் 2 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் வழிந்தோட கால்வாய் வசதி அமைக்கவில்லை. இதனால் அந்த இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதுடன் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுப்புழுக்கள் உருவாவதால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே தண்ணீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்