சிதம்பரம் நகரில் பள்ளி, கல்லூரிகள், பஸ் நிலையம் இருக்கும் பகுதிகளில் அதிக அளவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மாணவர்கள், வாலிபர்கள் மட்டுமின்றி முதியோர்களும் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். எனவே மேற்கண்ட இடங்களில் போலீசார் சாதாரண உடையில் கண்காணித்து, போதைப்பொருள் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும்.