பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் மற்றும் விபத்துகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பயன்பாடு இன்றி கிடக்கும் வாகனங்களை ஒரே இடத்தில் குவியலாக போடுவதால் யாருக்கும் பலன் இல்லை. மாறாக அதனை உரிய காலத்தில் ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களிள் எதிர்பார்ப்பாகும்.