அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா ?

Update: 2023-04-02 17:09 GMT

சேலம் 59-வது வார்டுக்கு உள்பட்ட சிவசக்தி நகர் 5-வது தெருவில் மழைகாலங்களில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் சாக்கடை கால்வாயும் ஆங்காங்கே முறையாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பல்வேறு தொற்று நோய்களால் அவதியடைகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் மழைகாலங்களில்மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பகுதிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

-தினேஷ், சேலம்.

மேலும் செய்திகள்