விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகருக்குள் அதிக அளவில் பன்றிகளும், மாடுகளும் திரிவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் மாடுகள் சாலையில் செல்வோரை முட்டுகின்றன. மேலும் திடீரென சாலையின் குறுக்கே செல்வதால் வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே கால்நடைகள் சாலையில் சுற்றுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.