ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2023-04-02 15:07 GMT
ஆலங்குடி பேரூராட்சி அலுவலகம் அருகில் வடகாடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்றது. ஆனால் இந்த சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலை குறுகலாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்