சுகாதார நிலையம் பராமரிக்கப்படுமா?

Update: 2023-04-02 09:07 GMT

சூலூர் அருகே உள்ள கோதபாளையம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. இதன் காரணமாக கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் துணை சுகாதார நிலையமே பொலிவிழந்து உள்ளது. எனவே அந்த கட்டிடத்தை முறையாக பராமரித்து, பொலிவுபடுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்