புகைப்பிடிக்க தடை விதிக்கப்படுமா?

Update: 2023-03-29 15:29 GMT
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தினமும் காலை, மாலை என 2 வேளையிலும் நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வரும் நடைபயிற்சியாளர்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் சம்பவம் அரங்கேறுகிறது. ஆம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செல்லும் சாலையில் இடது புறத்தில் உள்ள கடைகளில் பலர் சிகரெட் வாங்கி, பின்பக்கமாக நின்று கொண்டு டீ குடித்தபடி புகைபிடித்து மைதானம் நோக்கி ஊதி தள்ளுகிறார்கள். இது அந்த வழியாக நடைபயிற்சி செய்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மைதானத்தையொட்டியுள்ள கடைகளில் சிகரெட் விற்கவும், அங்கு நின்று புகை பிடிக்கவும் தடை விதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்